வேலு.சாந்தமூர்த்தி

நிலத் தகராறு,பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்

(Land Disputes)

(Law books in Tamil)


1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.
நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018
சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018W. P. No – 491/2012, dt – 4.6.2014W. P. No – 16294/2012, dt – 4.4.2014
2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.
S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019
3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் விஏஓக்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No – 13916/2019, dt – 1.7.2019
4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது. உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.
W. P. No – 18489/2009, dt – 1.7.2011
5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.
S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்
6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.
S. A. No – 2060/2001, dt – 2.11.2012S. A. No – 1715/1989, dt – 25.6.2002W. P. No – 16294/2012, dt – 3.4.2014
7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
Madras High CourtW. P. No – 18754, 20304, 2613/2005DT – 4.11.2013 A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)
8. பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others) 
9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளைபணி நீக்கம் செய்ய வேண்டும். 
W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court 
10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா் பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.
T. R. தினகரன் Vs RDO (2012 – 3 – CTC – 823)அம்சவேணி Vs DRO மதுரை. W. P No – 16294/2012…
இந்தப் பதிவை யார் எழுதியது எனத் தெரியவில்லை. இன்று காலையில் கண்ணில்பட்டது. அவருக்கு நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார், ஆரம்பகாலங்களில் கவிதைத் தொகுப்புகள் மூலம் தன்னை நல்ல கவிஞனாக அடையாளப்படுத்தியவர், மிக மிக எதார்த்தமாக வாழ்வை நோக்கி, குடும்ப அங்கத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், காணுகின்ற சமுதாயக் காட்சிகள் ஆகியவற்றுடன் சிலிர்ப்பாயும் சிராய்ப்பாயும் பெற்ற அனுபவங்களைக் கவிதையாக்கியவர். அந்தரத்துப் படிகளில் ஆகாசக் கோட்டையேறி பிளாஸ்டிக் பூக்களால் தன்னைத் தானே அலங்கரித்து வியக்கும் அருவருக்கத்தக்க போக்கு அவரிடமில்லை. இதுவே ஆரோக்கியத்திற்கு ஓர் அடையாளம். எளிய சொற்கள், வலிந்து கொனாரா மலேயே வருகின்ற ஓசையமைதி இவையே அவரது வலிமைக்கு அடையாளங்கள்.ஒரு நல்ல படைப்பாளி, கரம்பற்றிக் குலுக்குகிறான். விரல்பற்றியும் அழைத்துச் செல்கிறான். அவலங்களில் உடன் அழுகிறான். ஆறுதலாய்க் கண்ணீர் துடைக்கிறான். போர்க்களங்களில் வாள் தருகிறான். வெற்றிக் கணங்களில் மாலை சூட்டுகிறான். பாதையோரங்களில் சிலையாகி படைப்பாளிகள் நிற்பதெல்லாம் பயணம் செல்வோர்க்கு என்றென்றும் வழிகாட்டி நிற்கும் வெற்றியால்தான்! வாழ்த்துகளுடன்.

சில படைப்புக்கள்:

  • நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
  • கிராமம் நகரம் மாநகரம்
  • பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
  • ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
  • என்னை சந்திக்க கனவில் வராதே
  • சில்க் சிட்டி (நாவல்)
  • பால காண்டம் (கட்டுரைகள்)
  • குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
  • வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
  • தூசிகள் (கவிதைகள்)
  • அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)

தமிழகத்தில் லஞ்சத்தின் நிலைமை

நன்றி நண்பர் ரகுபதி காந்திய மக்கள் இயக்கம்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், காவலர்கள் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம் உத்தேசமாக குறிப்பிடப்பட்டு போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை லஞ்சம் பெறப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத மதுவிற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும், மணல் கடத்தலுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சூதாட்டம், விபத்து தொடர்பான வழக்குகளில் 10 ஆயிரம் ரூபாய் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது.

காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை, 100ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரைலஞ்சம் பெறுவது தெரியவந்துள்ளது.

எனவே, லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் போலீஸார் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்

அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம் மனவாசம் என்று பல அமர காவியங்கள் படைத்த கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள் இன்று.