புத்தகங்கள்

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 03.11.2021 அன்று (மாலை 6.45-7.45)

வணக்கம்,காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 03.11.2021 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:  எழுத்தாளர் அ.மார்க்ஸ்
புத்தகம்: “சத்திய ஒளி மகாத்மா:காந்தியைப் பற்றிய விமர்சனங்களும் உண்மைகளும்”
 (குறிப்பு: இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் (லிங்க்:https://meet.google.com/qwy-pozz-oei) நிகழும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்றும் லிங்க் WhatsApp வழி வழங்கப்படும்)

பேச்சாளர் பற்றி:தமிழில் தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ள எவரும் திரு.அ.மார்க்ஸ் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.அ.மார்க்ஸ் அவர்கள் எழுத்தாளர், செயல்பாட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர், என பன்முகம் கொண்டவர். பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் போன்றோர் முன்னேற்றம் தொடர்பாக தொடர்ந்து எழுத்து, பேச்சு மற்றும் களப்பணி ஆகியவற்றின் மூலமாக செயலாற்றி வருபவர்.


 நூல் பற்றி: நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுகிறது. ஒருவர் காந்தியைப் பற்றி அறிய முற்படும்போதே அவரைப் பற்றிய விமர்சனங்களும் உடன் சேர்ந்து வந்துவிடுகின்றன. காந்தி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல, அதே சமயம் அவ்விமர்சனங்களுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன என்று பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இருக்கு. அவ்வகையில், இந்நூலில், காந்தியைப் பற்றி பொது வெளியில் இருக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும், காந்தியத்தின் கொள்கைகளுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கிலும் எட்டு காந்திய அறிஞர்கள் எழுதிய 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சத்திய ஒளி பதிப்பகத்தார் வெளியிட்ட இந்நூலை, தன்னறம் பதிப்பகத்தார் அச்சிட்டு விநியோகம் செய்கின்றனர்.           

தொடர்புக்கு:      காந்தி கல்வி நிலையம்,தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,சென்னை – 600017

தொடர்புக்கு:  9790740886 (ம) 9952952686

விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழகத்தில் நுழைந்து தீபாவளி

விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழகத்தில் நுழைந்து தீபாவளி அறியப்படாத தமிழகம் நூலில் இருந்து

தீண்டாமை :18

சீர்திருத்தங்கள் மக்கள் மனதில் உருப்பெற வேண்டும். அதை ஒரு சமூகத்தின் பொதுப்புத்தியாக மாற்ற வேண்டும். அது சாமான்ய செயல் அன்று. யுகம் யுகமாய்ப் பேசிய பின்னும் ஒரு அடி தான் நகர முடியும் என்ற அரும் பயணம் அது. காந்திக்கு அது தெரியாததல்ல. எவரை விடவும் மக்களின் மனோபாவத்தை அதிகம் புரிந்து வைத்திருந்தவர் அவர்.
Raipur இல் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே காந்தி உரையாற்றினார்.”இங்கிலாந்தில் உள்ள மக்கள் தம் பணியாட்களை தம்முடைய குடும்ப உறுப்பினர்களைப் போலவே மரியாதையுடன் நடத்துகின்றனர். காண்பதற்கு இனிய காட்சி அது. அவர்கள் வீடுகளுக்குச் செல்லும் போதல்லாம் நான் அதைக் கண்டு மகிழ்ந்து, நானும் அதுபோலவே நடக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
ஆனால் நம் நாட்டின் நிலைமை தலைகீழ். நாம் சாதாரண மக்களை ஒரு போதும் சமமாக நடத்துவதில்லை. அதனால் தான் உங்களுக்காகத் தனிப்பட்ட பிரத்யேகக் கல்லூரிகளும் பள்ளிகளும் கட்டப்படுகின்றன. நீங்கள் மற்றவர்களை விட மேலானவர்களாக உயர்வானவர்களாக உங்களைக் கருதிக் கொள்கிறீர்கள்.
ஆனால், அந்தோ, அவர்களுக்கு மறுக்கப்பட்ட வசதிகளும் வாய்ப்புகளும் உங்களுக்கு வழங்கப்பட்டனவே தவிர, அவர்களை விட எந்தவிதத்திலும் நீங்கள் தனித்தன்மை உடையவர்களோ அல்லது சிறப்பு மிகுந்தவர்களோ அல்ல.
இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர் இராணுவத்திலும் கப்பற்படையிலும் சாதாரண வீரர்களைப் போலப் பணிபுரிகிறார்கள். சாதாரண மக்களுடன் கலந்து பழகி அனுபவம் பெறுகிறார்கள். நீங்களும் அவ்வாறு பழக வேண்டும். தீண்டாமை என்பதை அடியோடு அழிக்க முயல வேண்டும்.பிறப்பின் காரணமாக எந்த உயர்வு தாழ்வும் இல்லை.”
செல்வந்தர்கள் பயிலும் பிரத்யேகக் கல்லூரியில் காந்தி இவ்வாறு உரையாற்றினார்.
இடிப்பாரை இல்லாத சமூகம் சீர்கெடும். காந்தி இடித்துரைக்க என்றும் தயங்காதவர்.
#தீண்டாமை :18

By திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன்

மண்ணில் உப்பானவர்கள்

கண்ணதாசன் கவிதை

கண்ணதாசன் கவிதைகள் புத்தகம்

இந்த உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அற்புதமான சிந்தனைகள் வரலாம் ஆனால் வெற்றியை அடைவதற்கு ஒரே வழி கடின உழைப்பு.

சில சமயங்களில் சாதாரண சிந்தனைகள் கூட உச்சத்தை அடையும் அதற்கு வலுசேர்க்கும் வகையில் அதனைக் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு உச்சம் தொட்ட மனிதன் கிடைக்கும் போது.

அதனால் தான் நல்ல பொருள்களை விற்பனை செய்வதற்கு கூட உச்சம் தொட்ட மனிதர்களை வைத்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்

விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்

Durai vaiko advice to Mdmk executives, Only give books for competitive exams