பட்டேலும்… பாஜகவின் பொய்களும்

#பட்டேலும்… பாஜகவின் பொய்களும்
#அமித்ஷா பேசியது : காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் அமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
#மோடி பேசியது : அரசியல் அமைப்பின் 370 வது பிரிவை நீக்க எனக்கு தூண்டுகோளாக இருந்தவர் சர்தார் பட்டேல். இந்த முடிவை நான் அவருக்கு அற்பணிக்கிறேன்.
இவர்கள் இப்படி பேசினார்கள் ஆனால் வரலாற்று ஆவணங்கள் என்ன சொல்கிறது….
1949 ம் ஆண்டு மே மாதம் 15, 16 தேதிகளில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது வரைவு பிரிவை உருவாக்குவது தொடர்பான கூட்டம் பட்டேல் அவர்கள் இல்லத்தில் நடக்கிறது.  அங்கே, அப்போதைய காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் நியமிக்கப்பட்ட #என்ஜிஅய்யங்கார் தான் வரைவை தயார் செய்கிறார். அப்துல்லாவுக்கு  நேரு தரப்பிலிருந்து அனுப்ப வேண்டிய வரைவு சம்பந்தமான அறிக்கையை தயாரித்த அய்யங்கார் பட்டேலிடம் காண்பித்து, “நீங்கள் ஒப்புதல் அளித்த பின்பு இந்த வரைவு ஒப்பந்தத்தை நேரு சார்பில் அப்துல்லாவுக்கு அனுப்பிவிடலாம்.” என்று சொல்கிறார். பிறகு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு நான் உடன்படுகிறேன், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நேருவுக்கு பட்டேல் கடிதம் அனுப்புகிறார். 
1949 ல் கூட்டப்பட்ட காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் 370 வது பிரிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்று பட்டேல் வலியுறுத்துகிறார். 
அந்த ஆண்டு அக்டோபர் மாதம் நேரு வெளிநாடு செல்லவே, பிரதமருக்கான பொறுப்பை பட்டேல் கவனிக்கிறார். அந்த சமயத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பட்டேல் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக அப்துல்லாவின் கோரிக்கைகளை பட்டேல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். 
பிறகு இந்த வரைவு அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெறவேண்டிய சூழ்நிலையில் நேரு சற்று யோசித்த சமயத்தில் அதனை அரசியல் வரைவறிக்கையில் சேர்த்தவர் சர்தார் பட்டேல். 
அதே போல மகாராஜா ஹரி சிங்கை காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டவர் பட்டேல். 
அடுத்ததாக 1952 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் நாள் மக்களவையில் பேசிய (அன்றைய பாரதிய ஜனதா)  #ஜனசங்க தலைவர் #சியாமாபிரசாத்முகர்ஜி “காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லலாம் என்று அரசு எடுத்த முடிவில் நானும் அங்கமாக விளங்குகிறேன். அது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விசயம்…” என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது நேருவோடு சேர்ந்து பட்டேல் எடுத்த முடிவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்த மோடி அதனை  பட்டேலுக்கு அர்பணிக்கிறேன் என்று சொல்கிறார். அமித்ஷாவோ 370 ரத்து செய்ததன் மூலம் பட்டேல் கனவு நிறைவேற்றபட்டது என்கிறார். இதுல என்ன வேடிக்கைன்னா காஷ்மீர் பிரச்சனைய ஐ.நாவுக்கு எடுத்துட்டு போயி நேரு மாபெரும் தவறு இழைத்து விட்டார் என்று பாஜக சொல்கிறது. ஆனால் அந்த முடிவை பாஜக தலைவர்களும் சேர்ந்தே எடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மற்ற எல்லா கட்சிகளிலும் தொண்டர்கள் அறியாமையில் பொய் சொல்லுவார்கள், ஆனால் பாஜகவில் மட்டும் தான் தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களே பொய் சொல்லக்கூடிய மோசமான நிலை இருக்கிறது. 
பட்டேல் பிறந்தநாளில் புகழ் வணக்கம்…