தமிழக அரசுக்கு காந்திய மக்கள் இயக்கம் வேண்டுகோள் & எச்சரிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே,

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்திற்கு முட்டை வாங்குவதில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற, இந்த ஆண்டும் திட்டமிடப்பட்டு கொண்டிருக்கின்ற ஊழலை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் சொல்லக்கூடிய ஒரு சில நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்று, இதிலும் ஊழல் செய்வோம் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் அப்படியே தொடரும் எனில், உங்களுடைய ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன்,

காந்திய மக்கள் இயக்கம்