தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில், பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்று கொலை செய்த, “காமக் கொடூரன்’ கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி செய்துங்கநல்லூர், கிளாக்குளத்தை சேர்ந்த புனிதா, 13, நாசரேத் பள்ளியில், 7ம்வகுப்பு படித்தார். டிச., 20ம் தேதி, பள்ளி சென்ற புனிதா, வீடு திரும்பவில்லை. தாதன்குளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் காலை, அவரது உடலை போலீசார் மீட்டனர். தனிப் படை அமைத்து, கூடுதல், எஸ்.பி., கொலையாளிகளை தேடினார். மணியாச்சியைச் சேர்ந்த சுப்பையா, 37, என்பவன், மாணவியை கொன்றது தெரிந்தது. கைது செய்து விசாரணை நடத்தியதில், போதையில் கற்பழிக்க முயன்று, கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.
இதுகுறித்து, எஸ்.பி., ராஜேந்திரன் கூறியதாவது: சுப்பையாவுக்கு, வசந்தி என்ற மனைவி, மகள், இருமகன்கள் உள்ளனர். பெண்களிடம் சில்மிஷம் செய்வது இவனது பழக்கம். கடந்த மாதம், பாறைக்குட்டத்தில், சித்தி மகளிடம் தவறாக நடக்க முயன்றதால், கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தான். இப்பிரச்னையில், சித்தி மற்றும் அவர் மகளை அரிவாளால் வெட்டி, தலைமறைவானான். இந்நிலையில், தாதன்குளத்தில் இவனது அண்ணன் இசக்கிதுரை, ரயிலில் டீ வியாபாரம் செய்து வருகிறார். அவரது வீட்டிற்கு செல்ல, நெல்லையில் இருந்து, திருச்செந்தூர் ரயில் மூலம், தாதன்குளத்திற்கு, டிச., 19ம் தேதி இரவு வந்தான். மது குடித்துவிட்டு அங்கேயே தங்கினான். மறுநாள் காலையிலும், போதையில் இருந்தவன், காலை, 7:00 மணிக்கு, மாணவி புனிதா நடந்து வந்ததை கவனித்துள்ளான். அவரை, ரயில்வே ஸ்டேஷன் அருகே, முட்புதருக்குள் தூக்கிச் சென்று, கற்பழிக்க முயன்றான். புனிதா கூச்சலிடவே, சுரிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
December 2012
பூரண மது விலக்கு வேண்டி வைகோ நடைபயணம் – தமிழருவி மணியன் உரை
உங்கள் நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.
பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும், மதுவுக்கு எதிராகவும் மக்களை நடைபயணம் மூலம் சந்தித்து பிரச்சாரம் செய்யும்வைகோ மற்றும் சகாக்களை தமிழருவி மணியன் வாழ்த்தி ஆற்றிய உரை.. உவரி கிராமத்தில் 12 டிசம்பர் அன்று பயணம் தொடங்கியது… tamilaruvi maniyan speech at Uvari village
அன்று கூட்டத்தை ஆதரித்த நான் இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்,
லட்சிய மனிதனாக இருந்த தாங்கள் இன்று லட்சத்திற்காக அடிமை ஆகிப் போனீர்.
கரூர்: எதையும் சாதிக்கப் போவதில்லை என ஒரு கூட்டத்தை ஆதரித்த நான் இப்போது தோட்டத்தை ஆதரிக்கிறேன் என்று அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
…கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவுக்கு காலதாமதமாக வந்துள்ளேன் என்றே கவலைப்படுகிறேன்.அன்று ஒரு கூட்டத்தை ஆதரித்து வந்தேன். இப்போது, தோட்டத்தை ஆதரித்துள்ளேன்.
மதிமுக தொண்டர்களின் உழைப்பிலும், வியர்வையிலும் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட காரை திரும்பத் தருவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஆனால் இதுவரை திருப்பித் தரவில்லை. எனவே அவர் காரை உடனடியாக திருப்பித் தர வேண்டும். இதே போல் சங்கரன்கோவிலில் செய்த அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மூலம் ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டு அவருக்கு வீடு கட்டி தரப்பட்டது. அந்த வீட்டையும் அவர் மதிமுகவுக்கு வழங்க வேண்டும்.
மின்தட்டுப்பாடு வானத்தில் இருக்கலாம் தமிழகத்தில் இருக்காது: அமைச்சர் விஸ்வநாதன்
வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு மின் வீட்டு நீடித்தால் …
சேலம்: வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு வானத்தில் கூட மின்தட்டுப்பாடு இருக்கலாம், ஆனால், தமிழகத்தில் இருக்காது என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
சேலத்தில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,” தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்கிறது என்பது உண்மைதான். மின்சாரத்தை மட்டும் கொடுங்கள், ஓட்டுக்களை அள்ளிப்போடுகிறோம் என கூறுகிறார்கள். இது முதல்வருக்கும் தெரியும். தமிழகத்தை மின்தட்டுப்பாடே இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என ஜெயலலிதா கூறிவிட்டார்.
மின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து, வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு இல்லாமல் போய் விடும். வானத்தில் கூட மின்தட்டுப்பாடு இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் இருக்காது. அதற்கான வேலைகள் புயல் வேகத்தில் நடந்து வருகிறது.
மேட்டூரில் இன்னும் 10 நாட்களில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்” என்றார்.