மின்தட்டுப்பாடு வானத்தில் இருக்கலாம் தமிழகத்தில் இருக்காது: அமைச்சர் விஸ்வநாதன்

வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு மின் வீட்டு நீடித்தால் …

சேலம்: வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு வானத்தில் கூட மின்தட்டுப்பாடு இருக்கலாம், ஆனால், தமிழகத்தில் இருக்காது என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

சேலத்தில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,” தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்கிறது என்பது உண்மைதான். மின்சாரத்தை மட்டும் கொடுங்கள், ஓட்டுக்களை அள்ளிப்போடுகிறோம் என கூறுகிறார்கள். இது முதல்வருக்கும் தெரியும். தமிழகத்தை மின்தட்டுப்பாடே இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என ஜெயலலிதா கூறிவிட்டார்.

மின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து, வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு இல்லாமல் போய் விடும். வானத்தில் கூட மின்தட்டுப்பாடு இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் இருக்காது. அதற்கான வேலைகள் புயல் வேகத்தில் நடந்து வருகிறது.

மேட்டூரில் இன்னும் 10 நாட்களில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்” என்றார்.