ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

கர்நாடகத்தின் .‌.நாயகன்…..மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்….‌‌

48 இலவச பள்ளிக்கூடங்கள் ,
26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,
16 முதியோர் இல்லங்கள் ,
சுமார்
1800 மாணவ , மாணவியரின் கல்வி ,
என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .
இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் .

மனிதம் காப்போம் 🙏

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

கர்நாடகத்தின் .‌.நாயகன்…..
மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்….‌‌. 

பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு

பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு

பொதுவாழ்வில் நேர்மையும், தனிவாழ்வில் தூய்மையும் நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அருகி வருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அரசியல் களம் என்பது தன்னலம் துறந்து மக்கள் நலனுக்காகத் தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்விச்சாலை என்றுணர்ந்து சேவையாற்றிய தலைமுறையின் தளபதியாக விளங்கிய நன்மாறன் அவர்கள் கண்மூடிய செய்தி ஆரோக்கியமான அரசியலை நேசிக்கும் அனைவரையும் கண்ணீரில் நனையவிட்டது. 

பத்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பின்பும் வசிக்க ஒரு வீடின்றி வறுமையில் வாடிய அரிய மனிதர் நன்மாறன். மூச்சு முடியும்வரை ஓர் உண்மையான கம்யூனிஸ்டாக ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய மகத்தான மனிதர் அவர். ஒரு மார்க்சியவாதி எப்படியிருக்க வேண்டும் என்பதை வார்த்தைகளில் விளக்காமல் செயல் வடிவத்தில் வாழ்ந்து காட்டிய தோழர் நன்மாறனை இன்றைய இளைய சமுதாயம் நெஞ்சில் வைத்துப் போற்ற வேண்டும்.

அவரோடு பல மேடைகள் பகிர்ந்து கொண்டவன் நான். நகைச்சுவை இழையோட சமூக அவலங்களை அவரைப் போன்று விமர்சித்தவர்கள் வேறு யாருமில்லை.

அவருடைய இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்ல, பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம்.  

அன்புடன்
தமிழருவி மணியன்

P. Chidambaram Excellent Speech About Indian economy and Criticise Bjp Govt

1994 இல் இருந்து 1998 வரை நான் பொறியியல் படித்த போது தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு உரிய அத்தனை தகுதிகளும் உடைய மனிதர் என்று நான் ஏற்றிப் போற்றியவர் பா.சிதம்பரம் அவர்கள்.

பல தவறுகள் இவர் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட விதம் உதாரணத்துக்கு கொண்டுவரப்பட்டவை உதாரணத்துக்கு Surcharge and Cess.

வரி வருவாயை எப்படி மாநிலங்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசே முழுமையாக வைத்துக்கொள்வது எப்படி , மக்களிடமிருந்து அவர்கள் ரத்தத்தை அளவுக்கதிகமாக உறிஞ்சுவது என்பதை செயல்படுத்திக் காட்டியவர் பா.சிதம்பரம் அதை இப்போதிருக்கிற ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

P. Chidambaram Excellent Speech About Indian economy and Criticise Bjp Govt