மடல்

இடிந்தகரை… இடியாத நம்பிக்கை

நன்றி : www.gnani.net
“உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவை சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். ந்மக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குவிக்கை நினைவு கூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.

Continue reading…

மாற்றி மாற்றிப் பேசுவது ஏன்

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் சிறுபான்மை இனத்தவர் என்பதால் பழிவாங்கப்படுகிறார்’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்த போது நிழலாக இருந்தவர் ஜாபர் சேட். அவர் மீது தி.மு.க.வினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அனைத்தையும் குப்பையில் போட்டது தி.மு.க. தலைமை. ‘ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஒரு அதிகாரி மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கருணாநிதி எதிர்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது.

இதற்கான விடையைக் கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதும் திறந்த மடல் இதோ…
Continue reading…

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கடிதம்

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டின் தனிப்பெருந் தலைவியாக உயர்ந்து நிற்கும், கலைச்செல்வி.ஜெயலலிதா.ஜெயராம் அவர்களின் அறுதிப்பெரும்பான்மை வெற்றியினைவரவேற்று பாராட்டுவதோடு, ஈழத்தமிழினத்தின் விடியலுக்காய் அயராதுஉழைப்பார் எனவும் நம்பிக்கை கொள்ளும்,நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் ஆழ்மன வாழ்த்துக்களும், வேணவாவும்.
Continue reading…