உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !

தேர்தல் வாக்குறுதிகளில் செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்று செவிலியர்களின் போராட்டத்திற்கு எதிராக அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொன்னார் 5 ஆண்டுகாலம் நிறைவேற்ற வேண்டிய சாதனையை நாங்கள் ஐந்து மாதத்தில் முடித்துவிட்டோம் என்று.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரியை காணவில்லை என்று கர்ஜித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு அவருடைய அடிமைகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சுக்குநூறாக மாற்றிய பிறகு உங்களுக்கு எந்த ஒரு வெற்றியும் ஒரு மமதையை தரும் ஆனால் உங்களுக்கு முன்னால் ஒரு நேர்மை சார்ந்த எதிரி வருகின்றபோது நீங்கள் சுக்கு நூறாக போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை மட்டும் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.