January 2013

50 சென்ட்… மாதம் 30 ஆயிரம்…

பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!
த. ஜெயகுமார்,படங்கள்: பீரகா வெங்கடேஷ்
இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்…

கூட்டுப் பண்ணையில் கீரைகள்…

விரைவில் இயற்கை விவசாயச் சந்தை…

விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து… பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்… பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்… ஆச்சர்யம்தானே!
Continue reading…

”அவ்வளவு பணம் கொடுக்க முடியாது… கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதி வைக்கிறேன்”

ருத்துவமனைகள் அநியாயமாகப் பணம் பிடுங்குகின்றன என்​பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் இருந்தே ஊழ லுக்கான அஸ்திவாரங்கள் ஆரம்பம் ஆகின்றன என்பதைத்தான் சமீபத்திய சி.பி.ஐ. ரெய்டுகள் உணர்த்துகின்றன! 

கடந்த சில மாதங்களாகவே சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு சி.பி.ஐ. போலீஸுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக இரண்டு பேர் மீது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன். அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர். எஸ்.ஆர்.எம். பல் மருத்துக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருந்தவர். இன்னொருவர் அரசியல் ஆத ரவு பெற்ற சீனியர் டாக்டர். முருகேசனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊதுகுழலாகச் செயல்படுகிறவர்.  

Continue reading…

‘அமைச்சருக்குப் பங்கு கொடுக்கணும்!’

நன்றி : ஜூனியர் விகடன்

பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீது ஈரோட்டில் இருந்து ஒரு புகார்! 

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குழி அருகே 433 ஏக்கரில் பால​தொழுவுக் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத முள் அடிக்​கட்டை​களையும் மரங்களையும் வெட்ட, பொதுப்பணித் துறை மூலம் டெண்டர் விடப்​பட்டது. அந்த டெண்டர் விவ காரத்தில்தான் அமைச்சரின் தலை உருள்கிறது.

Continue reading…

என்று விடிவு தமிழுக்கு…

நன்றி : ஜூனியர் விகடன்
 
 
”தமிழில் வாதாடக் கூடாது!”
 
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லி​விட்டது சென்னை உயர் நீதி மன்றம். 

கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. அன்று நீதிமன்றத்தில் நடந்ததை அப்படியே தருகிறோம்.

Continue reading…