தமிழருவி மணியன்

மயிலாப்பூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேச்சு

மயிலாப்பூர் நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கருணாநிதி திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டி காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.

2G அலைக்கற்றை ஊழல் பற்றி தமிழருவி மணியன் அவர்களின் சிறப்பு பேட்டி

2G அலைக்கற்றை ஊழல் பற்றியும் அதில் திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் அவர் குடும்பத்தினர் பங்கு பற்றியும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மே 2011 முன்பு ஜெயா டிவிக்கு காந்திய மக்கள் இயக்க தலைவர் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் சிறப்பு பேட்டி.

நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது! -தமிழருவி மணியன்

உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ‘ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?’ என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள், தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில், பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!
Continue reading…

எல்லாக் கட்சிகளும் உங்கள் ஏவல் கூவல்களா? – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

அன்பிற்கினிய சகோதரி… வணக்கம். வளர்க நலம்.

உங்களுக்கு இவ்வளவு விரைவில் இன்னொரு கடிதம் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்க்க​வில்லை. நீங்கள் காலம் தந்த பாடத்தில் ஞானம் பெற்றிருப்பீர்கள் என்று நம்பினேன். உங்கள் அணுகு​முறையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று மக்களும் நம்பி மகிழ்ச்சிகொண்டனர். ஆனால், எந்த வகையிலும் நீங்கள் மாறவே இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை நீங்கள் கையாளும் முறை கவலை தருகிறது. உங்கள் ஏவல் கூவல்களாகவும், எடுபிடிகளாகவும் எல்லாக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
Continue reading…