ஊழல்

வாழ்க பணநாயகம் – தினமணி தலையங்கம்

பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும்.
Continue reading…

பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி இலஞ்சம்!

இந்த செய்தி உண்மையை இருக்கும் பட்சத்தில், இதுபோதுமே ஒரு புரட்சியை கொண்டுவர!!!,

என்ன நண்பர்களே, இது தேர்தல் நேரம் நாம் காசு பெரும் வழியை பார்போம் எதற்காக இந்த இரண்டு லட்சம் விவசாயுகள் பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும் என்கிறிர்களா, அதுவும் உண்மைதான்!

Continue reading…

வரலாற்று ஆசிரியர் கலைஞர்

கலைஞரை எழுத்தாளர், பேச்சாளர், தமிழக முதல்வர், திரை கதாசிரியர் என்று தமிழகம் அறியும்.
அந்த வகையுள் அவரின் புதிய அவதாரம் வரலாற்று ஆசிரியர்.

சமிபத்திய வரலாற்று பதிவு, அவரும் தோழர் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம்.

கலைஞர் அவர்களே, எதைவைத்து இதை சொல்கிறீர்கள், பராசக்தி திரைபடத்தின் உண்மையான கதைக்கு சொந்தக்காரர் தோழர் ஜீவா என்கின்ற உண்மையின் வெளிப்பாடா? அல்லது வேறு எதாவது காரணமா?
தமிழனுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது என்கின்ற சர்வாதிகார சிந்தனையின் வெளிப்பாடு என்பது தான் எனது கருத்து.

இது பற்றி தினமணி வெளியுட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரையில் உள்ள பல கருத்துகள் தவறானவை, இருந்த பொழுதும் ஜீவா என்கின்ற மனிதனை பற்றி நாம் சிந்திக்க இது உதவும். அந்த வகையில் தவறுகள் மன்னிக்க பட வேண்டியவை

நன்றி: தினமணி

பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!
Continue reading…

தெருவுக்கு வந்திருக்கும் தர்மபாலர்கள்! – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

‘நெருக்கடி நிலை நாயகர்’ சஞ்சய் காந்தி யின் முக்கியமான சீடர் அப்துல் ரகுமான் அந்துலே. 1980-களின் தொடக்கத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வராக மகுடம் சூட்டப்பட்டார். நவீன சுல்தானைப்போன்று நடந்துகொண்ட அந்துலே, ஊரை அடித்து உலையில் போட, ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளையை அமைத்தார். அந்த அறக் கட்டளைக்கு அள்ளிக் கொடுத்த தொழில் அதிபர்களுக்கும், வணிகப் பிரமுகர்களுக்கும் அன்று கடும் தட்டுப்பாட்டில் இருந்த சிமென்ட், எரிசாராயம் போன்றவை எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன், அவர்களுக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வழிவகுத்தார் அந்துலே. அவருடைய ஊழல் தாண்டவம் எல்லை மீறியதால், மக்கள் காங்கிரஸுக்கு எதிராக எழுந்தனர். கட்சியைக் காப்பாற்ற அந்துலேவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கும்படி இந்திரா காந்திக்கு நெருக்கமானவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ‘தன்னைப் பின்பற்றுபவரின் விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ள, பிரச்னை வரும்போது தலைமை அவர்களோடு சேர்ந்து நிற்க வேண்டும்’ என்று அவர்களிடம் கீதோபதேசம் செய்தார் இந்திரா. (ஆதாரம்: ‘இந்திரா காந்தி’ நூல் – ஆசிரியர் இந்தர் மல்ஹோத்ரா) அன்று அந்து லேவுக்கு இந்திரா ஆதரவாக நின்றார். இன்று ஆ.ராசாவுக்கு அரணாக நம் முதல்வர் நிற்கிறார்!

Continue reading…

இந்திய சாதனைகள் 1992 முதல் 2010 வரை

சித்திரகுப்தன் என்ற நண்பரால் வினவு இணையத்தளத்தில் தரப்பட்ட ஒரு தகவல், என் இதயத்திற்கு அருகில் இருந்தால் தானே கோவம் வரும் என்று கருதி இங்கே சேகரித்து வைக்கிறேன்….

இந்தியாவில் இதுவரை ஊழல் 73 லட்சம் கோடியை (1992 முதல் 2010 வரை) தொட்டுவிட்டது – விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை படங்களுடன் விஜயகாந்த் (அவரின் அரசியலை அம்பலப்படுத்த)கட்டுரை வினவில் சிரமப்பட்டிருக்க வேண்டுமா என என் நட்பு தோழர்கள் கேட்டனர். பல சிறப்பான கட்டுரைகளை தொட்டுப் படித்து மறு மொழி எழுதுவதைக் காட்டிலும் இது போன்ற சினிமா பெயருடன் இருந்தால் பலர் படித்து மறுமொழிக்கு மெனக்கெடுகிறார்களே என்பதும் வருத்தமாக உள்ளது

Continue reading…