ஊழல்

Ambani , RSS and Modi

ஜம்மூ காஷ்மீர் மாநில கவர்னராக இருந்தபோது அம்பானியுடைய இரண்டு கோப்புகளில் கையெழுத்திட எனக்கு 300 கோடி ரூபாய் லஞ்சம், நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டப்பட்ட RSS ஆள்மூலம் கொடுத்தனுப்பப்பட்டது…அவ்விரண்டு கோப்புகளையும் ரத்து செய்ததுடன் இவ்விவரத்தை மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்….சத்யபால் மாலிக் தற்போதைய மெக்காலயா கவர்னர்…

எக்சல் ஷீட்டை வைத்து செந்தில் பாலாஜிமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் ஆட்டுக்குட்டி அண்ணாமலையே இந்த தற்போதைய மெக்காலயா ஆளுநர் சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுமீது பிரதம மந்திரி மேற்கொண்ட நடவடிக்கை என்ன…?

 

மன்னிப்பு கேட்கமாட்டேன் – அண்ணாமலை

” மின்சாரத்துறை தொடர்பாக நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி சந்திப்பேன். தமிழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம். தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது.

மரியாதைக்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களே – ஊழல் நடந்திருப்பது உண்மை. அந்த ஊழல் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடந்தது என்பதும் உண்மை.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற ஊழல் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊழல் கட்சி என்று சொல்வது எந்த வகையில் தர்மமாகும்.

ஊழலுக்கு துணை போகின்ற பாரதிய ஜனதா கட்சி அதைச் செய்கின்றன அந்த இரண்டு கட்சிகளை விட மிக மோசமானது.

அற்புதம், எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!

கீழ்க்கண்ட செய்தி தட்ஸ்தமிழ் இணையத்தில் என்று வந்துள்ளது.

ஊழல் என்பது எவ்வளவு சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அரசியல் என்பது எப்படிப்பட்ட சாக்கடை மனிதர்களின் வாழ்விடமாக மாறிவிட்டது.

இரண்டு திராவிட திருட்டு கட்சிகளையும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து என்று அப்புறப்படுத்தும் அன்று தான் விடிவு.

சேலம் இளங்கோவன் வீட்டில் ரெய்டு! ஆடிப்போன Ex அமைச்சர்கள்..! அதிர்ச்சியில் சிட்டிங் அமைச்சர்கள்!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக கூறப்படும் இளங்கோவன் வீட்டில் நடைபெறும் ரெய்டால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டும் அல்ல தற்போதைய திமுக அமைச்சர்களும் கூட ஆடிப்போயுள்ளனர் என்கிறார்கள்.

யார் இந்த இளங்கோவன்? அதிமுகவில் பெரிய அளவில் லைம் லைட்டில் இல்லாதவர் என்றாலும் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவருக்கும் மிகமிக நெருக்கமாக இருந்தவர். ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்களின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் பார்த்து வந்தவர் இளங்கோவன் தான். இதனை அடுத்தே இவருக்கு கூட்டுறவு வங்கியில் உயர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார். அதனை கச்சிதமாக தக்க வைத்துக் கொண்டு அதிமுகவின் அதிகாரமையத்திற்குள் நுழைந்து ஒரு அதிகார மையமாகவே மாறிப்போயிருந்தார் இளங்கோவன். சேலம் மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக இவரைத் தான் எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ததே இவர் தான் என்கிறார்கள் லோக்கல் ரத்தத்தின் ரத்தங்கள்.

அமைச்சர்களுடன் தொடர்பு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்களை ரகசியமாக கண்காணிக்கும் பணி இளங்கோவன் வசம் இருந்தது. குறிப்பாக கான்ட்ராக்டுகள், பணியிடமாற்றங்கள், புதிய பணியிட நியமனம் போன்றவற்றிற்கு எவ்வளவு கமிசன் வாங்கப்படுகிறது. அந்த கமிசனில் சரியான அளவு கார்டனை வந்து அடைகிறதா என்பதை கவனிக்கும் பொறுப்பு இளங்கோவனுடையது. இதனால் ஜெயலலிதா இருந்த வரை அமைச்சர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தார் இளங்கோவன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமைச்சர்களை நேரடியாகவே இளங்கோவன் டீல் செய்ய ஆரம்பித்தார்.

திமுக அமைச்சர்களுடன் தொடர்பு இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த அனைவருமே இவருக்கு நெருக்கம் தான்.கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக இருப்பவர் என்கிற வகையில் திமுகவில் முக்கிய நிர்வாகிகள் சிலர், கடந்த சில ஆண்டாகவே இளங்கோவனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கூட்டுறவு வங்கிகள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் தகவலை அறிந்து நேரடியாகவே இளங்கோவனை தொடர்பு கொண்டு திமுக சீனியர்கள் சிலர் உதவி கேட்டதாகவும், எதற்கும் உபயோகமாக இருக்கும் என்று கட்சிகள் தாண்டி அப்போது திமுக சீனியர்களுக்கு இளங்கோவன் உதவியதாகவும் சொல்கிறார்கள்.

சீனியர்கள் தொடர்பு அந்த சீனியர்கள் பலர் தற்போது அமைச்சர்களான பிறகும் இளங்கோவனுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டும் அல்ல தற்போதைய திமுக அமைச்சர்களும் கூட இளங்கோவன் வீட்டில் நடைபெறும் ரெய்டால் அதிர்ந்து போயுள்ளனர்.

ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி!

திமுக ஆதரவு தளமான ‘மின்னம்பலத்’திலேயே வந்துள்ள ஒரு செய்தி.

—————-

தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தீபாவளிக்குக் கொடுக்கும் ஸ்வீட் கொள்முதலில் அதிகமான
கமிஷன் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு காலம் காலமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு கிலோ ஸ்வீட் மற்றும் காரம் கொடுப்பார்கள். அதுவும் மிக சுமாராகவே இருக்கும்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தீபாவளிக்குத் தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வழங்க நெய் கலந்த ஸ்வீட்டு ஒரு கிலோ ரூ 500 என்று சுமார் நூறு டன் வாங்கினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

புதிய ஆட்சி அமைத்துள்ள திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ராஜகண்ணப்பன்.

இந்த ஆண்டு தீபாவளி 2021 நவம்பர் மாதம் 4ஆம் தேதி வருவதை முன்னிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு
ஸ்வீட் கொடுக்க யாரிடம் ஆர்டர் கொடுப்பது என ஆலோசித்தனர். இந்த ஆர்டரை பெறுவதற்காக பல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு அமைச்சரை சந்தித்து வந்தார்கள்.

இந்த நிலையில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப் திடீரென்று மூக்கை நுழைத்துள்ளார். அவரே இதுகுறித்து
துறை அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை செய்துள்ளார்.

’கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ ரூ 500 என்று பர்ச்சேஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அதைவிடக்
குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று சிலர் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.

ஆனால் அமைச்சரின் மகன் இதை ஏற்கவில்லை. ஆவினைத் தவிர்த்து ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதியை
அழைத்து ஒரு கிலோ ரூ 600க்கு சப்ளை செய்யுங்கள், நெய் கலந்த ஸ்வீட் வழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை,
ஆயில் ஸ்வீட்டாக இருந்தாலே போதும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் 30% கமிஷனும்
பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த ஹோட்டல் நிறுவனமும் சம்மதித்துவிட்டார்கள்.

சுமார் 100 டன் ஸ்வீட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ ரூ 600 என்றால் மொத்தம் ஆறு கோடி ரூபாய்
அரசு பணத்தைக் கொடுக்கிறார்கள்.

அதில் 30% என்றால் – ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்” என்று பெருமூச்சோடு
நம்மிடம் பேசினார்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலரே.

அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பலமான சங்கமான சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நயினாரிடம்
இந்த விவகாரம் பற்றிப் பேசினோம்.

”போக்குவரத்துத்துறையில் 1.25 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு தீபாவளிக்கும்
ஊழியர்களே தரமான ஸ்வீட்கள் தயாரித்து ஒரு தொழிலாளிக்கு இரண்டு விதமான சுவீட்களை தலா ஒரு கிலோ கொடுத்து வந்தோம். செலவும் குறைவாகத்தான் இருந்தது,

கடந்த அதிமுக அட்சியில்தான் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஸ்வீட் கடைக்காரரிடம் ஆர்டரைக் கொடுத்து, ஒரு கிலோவை அரை கிலோவாகக் குறைத்து வழங்கி கமிஷனும் பார்த்து வந்தார் அதிமுக அமைச்சர்.

தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் முதல்வர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஊழல் இல்லாத ஆட்சி இருக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார், ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் கை நீட்டி விடுகிறார்கள்.

அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு ஆவின் மூலமாக ஸ்வீட் வழங்கினால் குறைவான விலையில் தரமானதாக இருக்கும். ஊழல் இல்லாமல் இருக்கும். ஆவினில் கிலோ 420 ரூபாய்தான்.

தனியாரில் ஒரு கிலோ ரூ 600க்கு பர்ச்சேஸ் செய்கிறார்கள். அதாவது கிலோவுக்கு 180 ரூபாய் அதிகமாகக் கொடுத்து
தரமில்லாத ஸ்வீட் வாங்குவதைத் தவிர்த்து, கார்பரேஷன் நஷ்டத்தில் இருக்கும்போது அரசுக்கும் 1.80 கோடியை மீதப்படுத்தலாம். மேலும் ஓர் அரசு நிறுவனத்தின் மூலம் இன்னொரு அரசு நிறுவனமான ஆவின் லாபம் அடையும். அரசு நிறுவனமான ஆவின் இருக்கையில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனியார்களிடம் போவதை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டுத் தடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்…