வேலு.சாந்தமூர்த்தி

அமைச்சர் பி.ஏ.,விடம் அடி வாங்கிய போலீஸ்

நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், திருச் செந்துார் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் பயன்படுத்தும், அரசுக்கு சொந்தமான ‘இன்னோவா’ கார் நிறுத்தப்பட்டிருந்தது.அங்கு, தலைமை காவலர் முத்துகுமார், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர், இன்னோவா காரை எடுக்க கூறி, டிரைவர் குமாரை வலியுறுத்த, அவர் மறுத்து விட்டார். அருகில் இருந்த ஆட்டோக்காரர்கள் சத்தம் போட்ட பின், காரை தள்ளி நிறுத்தினார். சிறிது நேரத்தில், ஓட்டல் அறையில் தங்கியிருந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், தகவல் தெரிந்து வெளியே வந்தார். போலீஸ்காரர் முத்துகுமாரை கடுமையாக திட்டினார். இருவர் பிடித்துக் கொள்ள, போலீஸ்காரர் முத்துகுமாரை தாக்கினார். அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற முத்துகுமார், பின், கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் காட்டுத் தீயாக பரவ, எஸ்.பி., ஜெயகுமார் சமாதானம் செய்தார். முத்துகுமார் கூறியதாவது:நான் பணிவோடு தான் சொன்னேன். ஆனால், டிரைவர் குமார் என்னை அவதுாறாக பேசினார். கிருபா, என்னை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கி கேவலமாக பேசினார். இரவில், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். நான் ஒரு சாதாரண போலீஸ்காரன். எல்லாமும் முருகக் கடவுள் சன்னிதி பகுதியில் நடந்துள்ளது. இறைவன் தண்டனை கொடுப்பான்.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உதவியாளர் கிருபாகரன் கூறியதாவது:போலீஸ்காரர் முத்துகுமார் தாறுமாறாக பேசியதோடு, டிரைவரிடம் அடாவடியாக நடந்துள்ளார். அதை தான் தட்டிக் கேட்டேன். அப்போது, காரசார விவாதம், தள்ளுமுள்ளு நடந்தது. இதை ஊதி பெரிதாக்கி விட்டார்.தன்னை அடித்ததாக போலீசில் புகார் கொடுத்து விட்டார். பிரச்னை செய்ய விரும்பாததால், இரு தரப்பினரும் சமாதானமாகி விட்டோம். புகார் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இதில், அமைச்சருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்பட்டபோது, எங்கள் மீது போலீசார் வெறுப்பில் இருந்தனர். அந்த வெறுப்புக்கு இப்போது பழிவாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”சென்னையில் இருக்கிறேன். இப்படியொரு சம்பவம் நடந்ததும் தகவல் வந்தது. தி.மு.க.,வினர் எப்போதும் போலீசுடன் இணக்கமாக செயல்படுவர். ”எனவே, போலீசாருடன் மல்லுக்கட்டக் கூடாது எனக் கூறி, ‘பொய் புகார் என்றாலும் கூட பரவாயில்லை; போலீசாரிடம் சுமுகமாக செல்லுங்கள்’ எனக் கூறி விட்டேன். அதன் அடிப்படையில் போலீசாருடன் பேசி சுமுகமாகி விட்டனர். பிரச்னை சுமுகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டது,”
என்றார்.

இது குறித்து, துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயகுமார் கூறும்போது, ”இந்த பிரச்னை, என் கவனத்துக்கு வந்தது. விசாரித்தபோது, நடந்த சம்பவம் உண்மை என தெரிந்தது. நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். ஆனால், புகார் கொடுத்தவர் அதை வாபஸ் வாங்கி விட்டார். ”இரு தரப்பும் சமாதானமாக போய் விட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து விட்டனர். அதனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,” என்றார். காஞ்சிபுரம் மற்றும் திருச்செந்துார் என, இரண்டு பிரச்னைகளும் தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டாலும், தி.மு.க.,வினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இவை வலு சேர்ப்பதாகவே உள்ளன என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.- நமது நிருபர், தினமலம்

மனித மூத்திரம் எரிபொருள் ஆக

அதற்குள் மூத்திரத்தை எப்படி எரிபொருளாகப் பயன்படுத்துவது என்று ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும்

ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி!

திமுக ஆதரவு தளமான ‘மின்னம்பலத்’திலேயே வந்துள்ள ஒரு செய்தி.

—————-

தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தீபாவளிக்குக் கொடுக்கும் ஸ்வீட் கொள்முதலில் அதிகமான
கமிஷன் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு காலம் காலமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு கிலோ ஸ்வீட் மற்றும் காரம் கொடுப்பார்கள். அதுவும் மிக சுமாராகவே இருக்கும்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தீபாவளிக்குத் தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வழங்க நெய் கலந்த ஸ்வீட்டு ஒரு கிலோ ரூ 500 என்று சுமார் நூறு டன் வாங்கினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

புதிய ஆட்சி அமைத்துள்ள திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ராஜகண்ணப்பன்.

இந்த ஆண்டு தீபாவளி 2021 நவம்பர் மாதம் 4ஆம் தேதி வருவதை முன்னிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு
ஸ்வீட் கொடுக்க யாரிடம் ஆர்டர் கொடுப்பது என ஆலோசித்தனர். இந்த ஆர்டரை பெறுவதற்காக பல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு அமைச்சரை சந்தித்து வந்தார்கள்.

இந்த நிலையில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப் திடீரென்று மூக்கை நுழைத்துள்ளார். அவரே இதுகுறித்து
துறை அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை செய்துள்ளார்.

’கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ ரூ 500 என்று பர்ச்சேஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அதைவிடக்
குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று சிலர் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.

ஆனால் அமைச்சரின் மகன் இதை ஏற்கவில்லை. ஆவினைத் தவிர்த்து ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதியை
அழைத்து ஒரு கிலோ ரூ 600க்கு சப்ளை செய்யுங்கள், நெய் கலந்த ஸ்வீட் வழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை,
ஆயில் ஸ்வீட்டாக இருந்தாலே போதும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் 30% கமிஷனும்
பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த ஹோட்டல் நிறுவனமும் சம்மதித்துவிட்டார்கள்.

சுமார் 100 டன் ஸ்வீட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ ரூ 600 என்றால் மொத்தம் ஆறு கோடி ரூபாய்
அரசு பணத்தைக் கொடுக்கிறார்கள்.

அதில் 30% என்றால் – ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்” என்று பெருமூச்சோடு
நம்மிடம் பேசினார்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலரே.

அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பலமான சங்கமான சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நயினாரிடம்
இந்த விவகாரம் பற்றிப் பேசினோம்.

”போக்குவரத்துத்துறையில் 1.25 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு தீபாவளிக்கும்
ஊழியர்களே தரமான ஸ்வீட்கள் தயாரித்து ஒரு தொழிலாளிக்கு இரண்டு விதமான சுவீட்களை தலா ஒரு கிலோ கொடுத்து வந்தோம். செலவும் குறைவாகத்தான் இருந்தது,

கடந்த அதிமுக அட்சியில்தான் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஸ்வீட் கடைக்காரரிடம் ஆர்டரைக் கொடுத்து, ஒரு கிலோவை அரை கிலோவாகக் குறைத்து வழங்கி கமிஷனும் பார்த்து வந்தார் அதிமுக அமைச்சர்.

தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் முதல்வர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஊழல் இல்லாத ஆட்சி இருக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார், ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் கை நீட்டி விடுகிறார்கள்.

அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு ஆவின் மூலமாக ஸ்வீட் வழங்கினால் குறைவான விலையில் தரமானதாக இருக்கும். ஊழல் இல்லாமல் இருக்கும். ஆவினில் கிலோ 420 ரூபாய்தான்.

தனியாரில் ஒரு கிலோ ரூ 600க்கு பர்ச்சேஸ் செய்கிறார்கள். அதாவது கிலோவுக்கு 180 ரூபாய் அதிகமாகக் கொடுத்து
தரமில்லாத ஸ்வீட் வாங்குவதைத் தவிர்த்து, கார்பரேஷன் நஷ்டத்தில் இருக்கும்போது அரசுக்கும் 1.80 கோடியை மீதப்படுத்தலாம். மேலும் ஓர் அரசு நிறுவனத்தின் மூலம் இன்னொரு அரசு நிறுவனமான ஆவின் லாபம் அடையும். அரசு நிறுவனமான ஆவின் இருக்கையில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனியார்களிடம் போவதை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டுத் தடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்…