விஜய்

தமிழகம் இருண்ட எதிர்காலத்தை நோக்கி ….

இது விகடன் இணையத்தில் வந்த ஒரு வாசகரின் கருத்து. என்னுடைய கருத்தும் இதேதான்.

நடிகர் ஒருவர், தனது படம் ஆளும்கட்சியால் கட்டம் கட்டப்பட்டதும் தன்னை காந்தி என்கிறார், எம்‌ஜிஆர் என்கிறார், அவமானப்படுத்தப்பட்டேன் என குமுறுகிறார். அடுத்து நாந்தான் என சூளுரைக்கிறார். நாமும் அத்தனையையும் காது குளிர கேட்டு மேனி சிலிர்க்கிறோம். உன்னுடைய படம் ஆளும் கட்சியால் நெருக்கடிக்குள்ளான ஒரு நிகழ்வு மட்டுமே தமிழகத்தை ஆளுவதற்கான தகுதியை உனக்கு தந்துவிட்டதா என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் சினிமாக்காரர்களுக்கு நாட்டை தாரைவார்க்க நமது அடிமை மனம் எப்போதும் தயாராகவே உள்ளது.
Continue reading…

வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?

வினவும், சவுகுக்கும் உண்மையுலேயே இந்த சமுகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறதா?

இந்த கேள்வி வரக் காரணம்,  அவர்களின் பதிவுகளும், செயல் திட்டங்களும் தான் நண்பர்களே,

அவர்களின் சமிபத்திய பதிவுகள்

இந்தியக் கடற்படையே, தமிழகத்தை விட்டு வெளியேறு

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

Continue reading…