ஜெயலலிதா

ஈழம் – ஜெயலலிதா செய்ய வேண்டியது….

ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா

சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இவை செய்தி தாள்கள் கொடுத்துள்ள செய்தியுன் தலைப்பு மற்றும் செய்தி சுருக்கம்.
ஆனால் ஜெயலலிதா அவர்களின் பேட்டி இந்த கருத்தை பிரதிபலிக்க வில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.

இதுதொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
Continue reading…

எல்லாக் கட்சிகளும் உங்கள் ஏவல் கூவல்களா? – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

அன்பிற்கினிய சகோதரி… வணக்கம். வளர்க நலம்.

உங்களுக்கு இவ்வளவு விரைவில் இன்னொரு கடிதம் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்க்க​வில்லை. நீங்கள் காலம் தந்த பாடத்தில் ஞானம் பெற்றிருப்பீர்கள் என்று நம்பினேன். உங்கள் அணுகு​முறையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று மக்களும் நம்பி மகிழ்ச்சிகொண்டனர். ஆனால், எந்த வகையிலும் நீங்கள் மாறவே இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை நீங்கள் கையாளும் முறை கவலை தருகிறது. உங்கள் ஏவல் கூவல்களாகவும், எடுபிடிகளாகவும் எல்லாக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
Continue reading…

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

நன்றி: ஜூனியர் விகடன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும்
இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.
Continue reading…

இது அல்லவா ஜனநாயகம்

தாவூத்துக்காக ஆஜராகிய சிபல் தொலைத் தொடர்பு அமைச்சராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து-ஜெ.

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உறவினர்களுக்காக பல வழக்குகளில் வழக்கறிஞராக தற்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆஜராகி இருக்கிறார். கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி வகிப்பது என்பது முரண்பாடுகள் நிறைந்தது. இந்தியாவிற்கு ஏற்பட்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

Continue reading…

இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..

நண்பர்களே வணக்கம்,

ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.

Continue reading…