கலைஞர்

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

நன்றி: ஜூனியர் விகடன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும்
இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.
Continue reading…

கலைஞருக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்

நன்றி : ஜுனியர் விகடன்

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்!

என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!
Continue reading…

வரலாற்று ஆசிரியர் கலைஞர்

கலைஞரை எழுத்தாளர், பேச்சாளர், தமிழக முதல்வர், திரை கதாசிரியர் என்று தமிழகம் அறியும்.
அந்த வகையுள் அவரின் புதிய அவதாரம் வரலாற்று ஆசிரியர்.

சமிபத்திய வரலாற்று பதிவு, அவரும் தோழர் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம்.

கலைஞர் அவர்களே, எதைவைத்து இதை சொல்கிறீர்கள், பராசக்தி திரைபடத்தின் உண்மையான கதைக்கு சொந்தக்காரர் தோழர் ஜீவா என்கின்ற உண்மையின் வெளிப்பாடா? அல்லது வேறு எதாவது காரணமா?
தமிழனுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது என்கின்ற சர்வாதிகார சிந்தனையின் வெளிப்பாடு என்பது தான் எனது கருத்து.

இது பற்றி தினமணி வெளியுட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரையில் உள்ள பல கருத்துகள் தவறானவை, இருந்த பொழுதும் ஜீவா என்கின்ற மனிதனை பற்றி நாம் சிந்திக்க இது உதவும். அந்த வகையில் தவறுகள் மன்னிக்க பட வேண்டியவை

நன்றி: தினமணி

பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!
Continue reading…

இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..

நண்பர்களே வணக்கம்,

ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.

Continue reading…