மாணவியின் உயிரின் விலை ஒரு லட்சம் ரூபாய்

தமிழக முதல்வர் தாயுள்ளதோடு இந்த நிகழ்வு நடந்து நன்கு நாட்களுக்கு பிறகு அறிவித்து உள்ளார்கள். துயரத்தில் இருந்து மீள நான்கு நாட்கள் ஆனதோ?

 

தூத்துக்குடி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி புனிதாவின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புனிதா குடும்பத்துக்கு…

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரின் மகள் மாணவி புனிதா 20.12.2012 அன்று பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.