அன்று கூட்டத்தை ஆதரித்த நான் இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்,

லட்சிய மனிதனாக இருந்த தாங்கள் இன்று லட்சத்திற்காக அடிமை ஆகிப் போனீர்.

கரூர்: எதையும் சாதிக்கப் போவதில்லை என ஒரு கூட்டத்தை ஆதரித்த நான் இப்போது தோட்டத்தை ஆதரிக்கிறேன் என்று அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

…கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவுக்கு காலதாமதமாக வந்துள்ளேன் என்றே கவலைப்படுகிறேன்.அன்று ஒரு கூட்டத்தை ஆதரித்து வந்தேன். இப்போது, தோட்டத்தை ஆதரித்துள்ளேன்.

மதிமுக தொண்டர்களின் உழைப்பிலும், வியர்வையிலும் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட காரை திரும்பத் தருவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஆனால் இதுவரை திருப்பித் தரவில்லை. எனவே அவர் காரை உடனடியாக திருப்பித் தர வேண்டும். இதே போல் சங்கரன்கோவிலில் செய்த அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மூலம் ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டு அவருக்கு வீடு கட்டி தரப்பட்டது. அந்த வீட்டையும் அவர் மதிமுகவுக்கு வழங்க வேண்டும்.