May 2011

ஈழ தமிழர் படுகொலைப் புத்தகம் பறிமுதல்: இலங்கை அரசுக்கு கண்டனம்

கரூர்: சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்பப்பட்ட “என்ன செய்யலாம் இதற்காக? ” எனும் ஈழ இனப் படுகொலைப் புத்தகத்தை பறிமுதல் செய்த இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து நூலாசிரியர் ஜெ. பிரபாகரன் மற்றும் மதுரை பென்குயின் பதிப்பகம் சார்பில் அ.சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கடந்த மே 9-ம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு “என்ன செய்யலாம் இதற்காக?” எனும் ஈழ இனப் படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த புத்தகங்களை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்டவிரோதமாக பறிமுதல் செய்துள்ளது. Continue reading…

முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு…

‘ஒன்றே செய்… நன்றே செய்… அதுவும் இன்றே செய்’ என்பது முன்னோர் வாக்கு!

மக்கள் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன? பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்புக்குரியவர்கள் ‘விகடன்’ மூலமாக வழிகாட்டுகிறார்கள்!

விவசாயம்
‘காவிரி’ எஸ்.ரங்கநாதன்

”விவசாயிகள் பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படத்தக்க வகையில், அரசு அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்னைகள் பல அண்டை மாநிலங்களோடு பேசித் தீர்க்க வேண்டியவை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர்த் தடங்களை நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!”
Continue reading…

கவிழக் காரணம் கருணாநிதியே!

கருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!

எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்… மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் – எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ”எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!” – இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ”என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்… பார்த்தீங்கள்ல… அதுதான் நடந்திருக்கு!” என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!

Continue reading…

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – பழ. நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

“எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
Continue reading…

தமிழகத் தலைவர்களை இனியும் நம்பாதீர்கள் — தமிழருவி மணியன் ஆவேசம்

எனது அரசியல் ஆசான் தமிழருவி அய்யா அவர்களின் வேண்டுகோள், விருப்பம்… உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழ தமிழர்களின் பார்வைக்கு….

TAMILARUVI MANIAN INTERVIEW TO KUMUDAM.COM ON UN REPORT ABOUT TAMIL GENOCIDE IN SRI LANKA

PART 1:

PART 2: