தமிழா, இவனல்லவா மனிதன், தமிழன், தன்னலம் துறந்தவன், தலைவன்!!!

தமிழா, பார், இவனல்லவா மனிதன், தமிழன். நீயும் நானும் எந்த தலைவனுக்காக காத்துகொண்டு இருக்கிறோம், அவனுடைய சிந்தனையை பார்!. நான் மீண்டும் சொல்கிறேன், நாம் விரும்புகிற மாற்றம் இந்த மனிதனில் தான்,  தமிழருவி மணியன் மூலம் தான் தொடங்க வேண்டும்.  ஆம் அப்பொழுதுதான் அந்த மாற்றம் உண்மையானதாக, நிலையானதாகவும் இருக்கும். வாருங்கள் நண்பர்களே இவரின் பின்னால் அல்ல, இவருடன் இணைந்து மாற்றத்தை நோக்கி நடப்போம்.

தமிழருவி மணியன் பற்றி ஒரு நண்பர் இங்கு சொல்லியுருப்பது இதுதான்.

அரசியலில் நல்லவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தமிழகத்தில் யாரிடமாவது கேட்டால், சமகாலத்தில் உள்ளவர்களின் பெயரை அவர்களின் பதிலில் எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடம் கட்சியில் இருந்தால் போதும் ராக்கெட் வட்டியில் கடன் வாங்கி, காசு கொடுத்து எம்.பி சீட் வாங்கி விடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில், அங்காங்கு அரசியல் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் தமிழருவி மணியன்.

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் 9th Jan 2011 மாலை நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் அவர்களின் உரை உங்களின் பார்வைக்காக